சிறுவயதில் இருந்தே தன் தாயுடன் புட்டபர்த்திக்கு அடிக்கடி சென்று பல நாட்கள் தங்கியிருந்து ஸ்வாமியின் தரிசனங்களைப் பெற்று பின் பாலவிகாஸ் தொடங்கிய பிறகு குருவாகி பல பால விகாஸ் குழந்தைகளையும் குருமார்களையும் தயார் செய்து, நம் சத்ய சாயி சேவா அமைப்பில் District Education Coordinator-ஆக பல ஆண்டுகள் பணிபுரிந்த திருமதி ஜோதி ஜெயராமன் அவர்கள் சிறு வயதிலிருந்து அவருக்கு ஏற்பட்ட ஸ்வாமியுடனான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.